Saturday, 27 February 2016

காந்தம்




பெண்களின் கண்களில் உள்ளது காந்தம்....
அவற்றிற்கு- தேவையானவர்களை ஈர்க்கவும் தெரியும்...
தேவையற்றவர்களை நீக்கவும் தெரியும்...



                                                                            ~காற்றின் சிறகுகள்

என் அழகியின் சிரிப்பு




சின்ன சிரிப்பில் உள்ளம் கொள்ளை செய்யும் என் அழகே....
ஒரு உண்மையை உணர்ந்துகொள்.... உன் சிரிப்பில் மட்டும்
 நான் உன்னை ரசிப்பதில்... உன் அழுகையிலும் தான்....
உன் கண்ணீர் என் உள்ளம் என்னும் ரோஜாவை
 உயிர் கொள்ள செய்யும்  பன்னீர்....





                                                                        ~ காற்றின் சிறகுகள் 

உனக்காய் வாழ்வில் ஒரு அத்தியாயம்.....



கண்டேன்....முதல் காதல் கொண்டேன்....
விண்ணிலும் காண மாற்றங்கள் என்னுள் கண்டேன்....
மண்ணுக்குள் வாசம் போல் உன் சுவாசம் கொண்டேன்...
பல்லவியும் சரணங்களும் உன் குரலில் உணர்ந்தேன்...
பலநூறு எண்ணங்கள் என் மனதில் சேர்த்தேன்...
உன் விழியில் என் உலகம் நான் காண்பேன் என்றேன்....
என் இரு விழியும் குருடாகி  இருள்  வீதியில் நின்றேன்....
காதல்---- பிறப்பதில் இல்லை இறப்பதில் இன்பம் தரும்....



                                                                                         ~ காற்றின் சிறகுகள்