Saturday, 5 March 2011

கடவுளிடம்.....

தவறு செய்யவென்றே எனக்கு பிறப்பு அளித்தாயோ......
காதல் மனதினை கூட ரணமாக்குகிறதே என் செயல்......
யாரையும் புரியாமலே.....புரிந்ததாய் உணருகின்றதே மனம்......
தேவை இல்லாத போதும்......தானாய் தலை இடுகிறதே என் உள்ளம்....
பாசத்தை தர தெரிந்தும்......பெற தெரியவில்லையே.......
இத்தனை தவறுகளை செய்கின்றதே இந்த ஜடம்.....
என்றுதான் இதற்கு விடுதலையோ.???
முடிந்தால் பிறர்காவது அளித்து விடு இவளிடமிருந்து...


                                                                                         ~ காற்றின் சிறகுகள்

Tuesday, 1 March 2011

அணை...திறக்கும்....

காலை மாலை என்று உன்னை தேடி பார்த்த கண்கள் -
இன்றும் தேடுகின்றது பழைய புகைப்படங்களில்.....

வேண்டியதை கேட்டு ருசித்த நாக்கு-
இன்றும் ஏங்குகிறது உன் சமையல் ருசிக்கு.....

உன்னிடம் மட்டுமே சண்டையிட்ட மனம்-
இன்றும் சண்டையிடுகிறது அதனுடன்.....

உன்னிடம் மட்டுமே உணர்ந்த வெட்பத்தை-
இன்றும் உணர தவிக்கிறது என் உயிர்.....

நீ அழகாய் அழைத்திடும் செல்ல பெயரை கேட்ட காதுகள்-
இன்றும் துடிக்கிறது உன் குரலை கேட்க......

உன்னுடைய வாசத்தை உணர்த்த நாசி-
இன்றும் காற்றில் சுவாசிக்க தேடுகிறது.....

உன் மடியினில் குழந்தையாய், சீண்டிடும் மழலையாய்
என்றும் மாறிட ஏங்குகிறது என் ஆன்மா.....

இவற்றை எல்லாம் பேசிட பொங்கிடும் வார்த்தைகளை...அடகுகிறேன்
அணைகட்டி....ஒருநாள் உன் அருகில் வருவேன்....அன்று திறக்கும் என்
வார்த்தை அணை.......



                                                              ~ காற்றின் சிறகுகள்

அன்புள்ள அம்மா.....


உன் பாசம் எங்கே???
நீ நீங்கிய நொடியே பறித்தாயோ .........
என் சிரிப்பு எங்கே???
உன்னுடனே கொண்டு சென்றாயோ......
என் வாசம் எங்கே???
உன் வாசத்தை என்னில் நீக்கிய போதே நீங்கியதோ....
இவை இல்லாவிடினும் நீ இருந்திருக்கலாமே.....
வந்துவிடு என்னிடம் இல்லை அழைத்து செல் உன்னிடம்....




                                                                                        ~ காற்றின் சிறகுகள்