Saturday, 5 January 2013

என்றும்...



மனதில் உள்ள பாரம் உன்னால் என்றால்....
என்றுமே...சுமந்திருப்பேன்.
உனக்காய் வாழ்வதில் வலி நிறைந்திருந்தால்..
என்றுமே....சிரித்திருப்பேன்.
உன்னிடம் சேர்ந்திடும் யோகமிர்ந்தால்...
என்றுமே....மரணிப்பேன்.
உனக்காய் இருப்பேன் கனவிலும்...நினைவிலும்....
என்றுமே....எதிலுமே.....




                                                                    ~ காற்றின் சிறகுகள்



சுவாசமே.....


என்றும் உன் நினைவில் நான் இருப்பதால்தான்....
இந்த உலகமும் எனக்கு புதிதாய் தோன்றுகிறது.
உன் சுவாசமும் கலந்திருக்கும் காற்றானதால் தான்...
எனது சுவாசமும் சீராக இயங்குகின்றது.
எனக்காய் நீ ஒருவன் இருப்பதால் தான்....
இன்னும் என் உயிர் வாழ்கின்றது.

                                                          ~காற்றின் சிறகுகள்

உயிரே....


கைபிடிக்கும் தொலைவில் நீ இருபினும்....
கண் இமைக்கும் நொடியில் மறைகிறாய்....என்னுள்...
மேகமாய்....முகிலாய் நீ இருந்தால்
 உன்னை ஏந்திகொள்ளும் வானமாய் நான் வருவேன்....
மனதில் என்றும் உன்னை என் உயிராய் சுமப்பேன்....

                                                                     ~காற்றின் சிறகுகள்