Thursday, 8 September 2011

நட்பின் தேடல்...............

அறிவாய் அழகாய் உயிராய் எனக்காய்
பண்பும் பற்றும் உயிரும் என்றும்
எனக்காய் கொண்டு வாழும் ஜீவன்
மற்றொரு பிறவி கொண்டே நானும்
சேயாய் உனக்கு ஆகிட வேண்டும்.......



                                                                                  ~ காற்றின் சிறகுகள்

Saturday, 3 September 2011

மௌன ராகம்

என் பெயரின் வலப்பக்கம் உன் பெயர் சேர்த்தேன்
அது...என்பெயரையும் அழகாய் மாற்றியது.......
மௌனத்தின் அமைதியில் காத்திருந்தேன்.....
மனதில் ராகம் பாடியது........
கனவின் தொடரோ என்றிருந்தேன்.....
என் நினைவின் தொடக்கம் என்றானது.......



                                                                     
                                                              ~ காற்றின் சிறகுகள்

காதல்....

காதல் பாடலை கேட்கையிலே....
காதலாய் நெஞ்சம் மாறிடுதே....
இதுவும் காதல் ஆகிடுமோ......
என் உள்ளம் குழம்பி வாடிடுதே.....



                                                                ~ காற்றின் சிறகுகள்

Wednesday, 4 May 2011

அப்பா...மகள்.....


மகள் தூங்க தூங்காது இருக்கும் ஆண்....
பெண் ஆனதமாய் பள்ளி செல்ல அயராது உழைக்கும் ஆண்....
பெண் சிரிக்க தான் சிரிக்கும் ஆண்.....
மகள் வளர தன்னை உருகும் ஆண்....
பெண் படிக்க இரவிலும் விழித்திருக்கும் ஆண்...
ஒவ்வொரு பெண்ணையும் முதலில் நேசிக்கும் ஆண்.....
மகளின் முதல் தோழனான ஆண்.....
மகளின் முதல் காதலுக்குரிய ஆண்....
பெண்ணின் முதல் வழிகாட்டியாகும் ஆண்.....
நேற்றும்..இன்றும்...என்றும்.......மகளை தனது
தாயாகவே பார்த்திடும் ஆண்.........




                                                                           ~ காற்றின் சிறகுகள்


Saturday, 5 March 2011

கடவுளிடம்.....

தவறு செய்யவென்றே எனக்கு பிறப்பு அளித்தாயோ......
காதல் மனதினை கூட ரணமாக்குகிறதே என் செயல்......
யாரையும் புரியாமலே.....புரிந்ததாய் உணருகின்றதே மனம்......
தேவை இல்லாத போதும்......தானாய் தலை இடுகிறதே என் உள்ளம்....
பாசத்தை தர தெரிந்தும்......பெற தெரியவில்லையே.......
இத்தனை தவறுகளை செய்கின்றதே இந்த ஜடம்.....
என்றுதான் இதற்கு விடுதலையோ.???
முடிந்தால் பிறர்காவது அளித்து விடு இவளிடமிருந்து...


                                                                                         ~ காற்றின் சிறகுகள்

Tuesday, 1 March 2011

அணை...திறக்கும்....

காலை மாலை என்று உன்னை தேடி பார்த்த கண்கள் -
இன்றும் தேடுகின்றது பழைய புகைப்படங்களில்.....

வேண்டியதை கேட்டு ருசித்த நாக்கு-
இன்றும் ஏங்குகிறது உன் சமையல் ருசிக்கு.....

உன்னிடம் மட்டுமே சண்டையிட்ட மனம்-
இன்றும் சண்டையிடுகிறது அதனுடன்.....

உன்னிடம் மட்டுமே உணர்ந்த வெட்பத்தை-
இன்றும் உணர தவிக்கிறது என் உயிர்.....

நீ அழகாய் அழைத்திடும் செல்ல பெயரை கேட்ட காதுகள்-
இன்றும் துடிக்கிறது உன் குரலை கேட்க......

உன்னுடைய வாசத்தை உணர்த்த நாசி-
இன்றும் காற்றில் சுவாசிக்க தேடுகிறது.....

உன் மடியினில் குழந்தையாய், சீண்டிடும் மழலையாய்
என்றும் மாறிட ஏங்குகிறது என் ஆன்மா.....

இவற்றை எல்லாம் பேசிட பொங்கிடும் வார்த்தைகளை...அடகுகிறேன்
அணைகட்டி....ஒருநாள் உன் அருகில் வருவேன்....அன்று திறக்கும் என்
வார்த்தை அணை.......



                                                              ~ காற்றின் சிறகுகள்

அன்புள்ள அம்மா.....


உன் பாசம் எங்கே???
நீ நீங்கிய நொடியே பறித்தாயோ .........
என் சிரிப்பு எங்கே???
உன்னுடனே கொண்டு சென்றாயோ......
என் வாசம் எங்கே???
உன் வாசத்தை என்னில் நீக்கிய போதே நீங்கியதோ....
இவை இல்லாவிடினும் நீ இருந்திருக்கலாமே.....
வந்துவிடு என்னிடம் இல்லை அழைத்து செல் உன்னிடம்....




                                                                                        ~ காற்றின் சிறகுகள்

Monday, 28 February 2011

காதல் பெண்ணின்....சுதந்திரம்....

போராடி பெற்றது நம் நாட்டின் சுதந்திரம் மட்டும் அல்ல....
உன்னிடத்தில் இருந்து நான் பெற்ற என் சுதந்திரமும்.......
போரட்டத்தின் வெற்றியில் சுதந்திரம் கிடைப்பினும்....
என்னை வீழ்துகிறாய் உன் சந்தேகம் என்னும் ஆயுதத்தால்.....
இனி சுதந்திரம் இருபதின் பலன் என்ன????
தருகிறேன் திரும்ப பெற்றுகொள் நீ அளித்த சுதந்திரத்தை.....



                                                                   

                                                                         ~ காற்றின் சிறகுகள்

Wednesday, 23 February 2011

ஏன்???

என்னுள் மாற்றம் நிகழ்வதை அறியும் என்னால்....
ஏற்கவோ....தடுக்கவோ முடிவதில்லை......
தானாய் சிரிக்கும் என் மனமோ....
ஏனோ உன் முன் அழுவதில்லை.....
உனக்காய் வாழும் எனக்கோ....
இயல்பால் எதற்கோ வாழ்க்கை இல்லை....
குழப்பமே....விடையாகி.....ஆழ் கிணற்றில் நான்.....



                                                                                ~ காற்றின் சிறகுகள்

Wednesday, 16 February 2011

வாழ்க்கை...

இனி நீ இல்லை என்றால் இறப்பேன் என கூறமாட்டேன்....
அதனிலும் கொடுமையான வாழ்வை வாழ்வேன்...
உனக்காய்......உன்னால்......




                                                      ~  காற்றின் சிறகுகள்

நம்பிக்கையில்.....

இது வரை என்னுள் எழாத வலியினை
ஏற்கிறேன் இன்று.....உன்னால்.....
எதுவரை என்று தெரியாத போதும்....
மருந்தாய் நீயே வருவாய் என்னும் நம்பிக்கையில்.....





                                                                 ~ காற்றின் சிறகுகள்

ரசிப்பு...

உன் ஒற்றை நிமிடம் கூட ரசிக தவறாத எனக்கு...
நீ கேட்ட ஒற்றை வார்த்தைகளைகூட
 ரசிக்க

 முடியவில்லை....
நீ கேட்டது என்னிடம் அல்ல....
என்னில் வாழும் உன்னிடம் என்பதால்....



                                                                            ~ காற்றின் சிறகுகள்


மறந்தேன்-மணந்தேன்...

உனக்காய் பெற்றோரை மறந்தேன்....
உடன் பிறப்பை மறந்தேன்.....
உண்மை நட்பை மறந்தேன்....
உணர்வுகளை மறந்தேன்.....
நீயோ.....இறுதியாய் என்னையே மறந்தாய்....
நானோ....மரணத்தை மணந்தேன்............



                                                                         ~ காற்றின் சிறகுகள்

காதல்....

தொடக்கத்தில்....இனிமை....
தொடங்கியபின்.... பசுமை...
தொடர்வதில்....கடுமை.....
தொடரும் நிலை வெறுமை....

                                           
                                                                           ~ காற்றின் சிறகுகள்


வலி...

கத்தியினால் வெட்டி பார்த்தேன் வலிக்கவில்லை...
இரும்பினால் சுட்டு பார்த்தேன் எரியவில்லை...
கம்பத்திலும் முட்டி பார்த்தேன் முறியவில்லை....
உன் ஒற்றை வார்த்தையில் யாவையும் உணரவைத்தாய்.....




                                                                              ~ காற்றின் சிறகுகள்


                                                                   

Monday, 3 January 2011

என் இனிய அண்ணனுக்கு....

என் இனிய அண்ணனுக்கு....
உடன் பிறவா பொழுதிலும்...
உண்மையாய் பாசம் தந்தாய்...
உன் உதிரம் தனை போல கண்ணிமையாய் கொண்டாய்...
அன்பிற்கு ஏக்கமின்றி..அலைபோல் அள்ளி தந்தாய்...
குறும்புகள் அதிகம் செய்தும்...அழகாய் அதை ரசித்தாய்...
கோபம் கொண்டு கத்தும் போதும் அமைதியாய் புன்னகைத்தாய்...
ஏமாற்றம் கண்டபோது அன்னையாய் அரவணைத்தாய்...
இத்தனையும் செய்த உனக்காய்....பலன் என்ன நான் செய்ய??
அடுத்த பிறவி கொண்டு உன் தங்கையாய் உடன் பிறப்பேன்...
பிறவி கடன் தீர்ப்பேன்.....


                                                                          ~ காற்றின் சிறகுகள்



நாணம்....

என்னை உன் வீட்டின் முற்றத்தில் காக்க வைத்து...
நெடுநேரம் பின் வீடு வந்து...
சென்ற வேலை நடவாது...
ஏமாற்றம் கொண்டு... நேரத்தின் குறைபாடாய்
ஓடி சென்று குளியல் செய்து....
ஈரமுடன் நீ வர....உனக்காய்
காத்திருந்த என் மனம் உன்னை கண்டதும்
ஓடிவந்து உன் தலை துவட்ட ஏங்கிடும்..
அழகாய் உன் புன்னைகை கண்டு....
அணைத்து முத்தமிட நான் குரல் எழுப்பும் முன்..
ஓடி நீ அறை புகிந்திட...என்மனமும் நாணதிடம் புகிந்திடும்...



                                                                            ~ காற்றின் சிறகுகள்


உன் ஒற்றை முத்தம்...........

மனதில் இதுவரை காணாத பயம்...
பனி இரவிலும் இல்லாத நடுக்கம்...
தீராத காய்ச்சலிலும் இல்லாத வெட்பம்...
பரிட்சையிலும் இல்லாத குழப்பம்....
காதலிலும் இல்லாத தவிப்பு.....
இவை எல்லாம் தந்தது.....உன் அழகிய ஒற்றை முத்தம்........




                                                                   ~ காற்றின் சிறகுகள்

வார்த்தைகள்.....

உன் வீட்டில் தனியாய் நாம் இருந்தபோது....
காவலுக்காய் உன் பாச வளர்புகளை விட்டு...
நாம் பார்வையில் புரிந்த காதலை சொல்ல...
விளக்க...ஜென்மம் ஒன்றல்ல....ஓராயிரம் இருபினும்...
போதாது வார்த்தைகள்!!!!!!!!!!!!!



                                                                            ~ காற்றின் சிறகுகள்

எதிர்பார்ப்பு..........

மௌனமாய் கழிந்த நிமிடங்களில்
என் மனமெங்கும் நிறைந்தது எதிர்பார்ப்பு.....
நீ எப்போது உன் காதலை சொல்வாய் என????
நிறைவேற்ற நாள் தேடும் நீ...... நம்பிக்கையில் நான்!!!!!!!!!!!!!!



                                                                   ~ காற்றின் சிறகுகள்